பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலின் பெயர்கள் HH= i + = == - கண்ணுக்கும் எட்டாது கடந்து நிற்கும் காரணத்தால் உனைக்கடலென் றழைத்தார் முன்னோர்; எண்ணுக்குள் அடங்காத புனற்ப ரப்பை ஏற்றுளதால் பரவையென இயம்பி நின்றார்; உண்ணற்கோ உவர்ப்புடையாய் அதனா லுன்னை உவரியெனப் பெயருரைத்தார்; மலையி னின்று மண்ணுக்குள் ஓடிவரும் எல்லா ஆறும் மருவியுனைப் புணர்வதனால் புணரி என்றார். அளக்கரிது நின்பெருமை எனவு ணர்ந்தே அளக்கரெனப் பெயரிட்டார்; அலை யெழுப்பி முழக்குகிற வேலையினை ஒய்வே யின்றி முப்பொழுதும் செய்வதனால் வேலை என்றார்; விளக்கமுறச் சொலமுடியா ஆழங் கொண்டு விளங்குவதால் ஆழியென்றார்; ஆக்க லோடும் அழித்தலெனக் காத்தலென மூன்று நீர்மை அமைந்தமையால் முந்நீரென் றானாய் இங்கே, 44 0 கெஞ்சிற் பூத்தவை