பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிர்ப்பொம்மை பத்துத் திங்கள் பரிவுடன் வயிற்றில் வைத்துக் காத்து வளர்த்தஓர் பூஞ்செடி, மனத்தில் ஊறிய மாசறு நினைவுகள் அனைத்தும் சேர்தரத் தளிர்த்த பசுந்தளிர்; இருவர் அன்பும் இணைந்து பிணைந்து மருவிய நாளில் மலர்ந்ததோர் அரும்பாம்; இருவிழி குளிர ஈன்றோர் மகிழக் குறுகுறு நடைபயில் கோலச் சிறுதேர்; பொருளொடு புனராப் புதுவகை மொழியைச் சிறுமலர் வாயால் சிந்திடும் பைங்கிளி; சுருள்படு சிறுமுடி, மருள்நிறை கருவிழி, எழில்தவழ் செவ்விதழ், இணையிலாக் குறுநடை, தளிர்நிகர் சிறுவிரல், தங்கத் திருநிறம், குளிர்மொழி அனைத்தும் கொளும்உயிர்ப் - -- பொம்மை; அம்மக வுயிரை அருந்திய நோயினை அம்மையென் றறைகுவர்; அடுக்குமோ அப்பெயர்? எங்கே அவ்வெழில்? எங்கே அவ்வுயிர்? 52 0 கெஞ்சிற் பூத்தகை