பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சிற் புகுந்த வேல் அறிவும் பண்பும் அமைதியோ டெழிலும் . செறிதரு திருமுகம் மருவிய குழலி! முகமல ரிதழில் தவழ்தரு மூரலில் தொகைநூ லினிமை தோன்றுதல் கண்டேன்; உள்ளக் கருத்தைத் தெள்ளிதின் உரைக்கும் கள்ளம் அறியாக் கயல்விழி கண்டேன்; ஆறாம் வகுப்பே தேர்நீ, ஒருபிழை நேரா தெழுதும் நேர்த்தி கண்டேன்; பிள்ளைமை நிலையிலும் பெரியவள் போல் நீ என்னை ஓம்பிய இயல்புங் கண்டேன்; பெதும்மை நின்னை வியந்து புகழ்ந்தேன். ததும்பும் இனிமைத் தமிழை நின்வாய் மழலை வடிவில் தருமென மகிழ்ந்தேன்; அழகோ வியமே! இம்மகிழ் வெங்கே? பூசாச் செம்மை பொருந்திய நின்னிதழ் பேசா தெனலும் பேதுற் றயர்ந்தேன்; ஆண்டவன் படைப்பென அன்னை நவின்றனள் 54 - கெஞ்சிற் பூத்தவை