பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்லமலர்ச் சோலைக்கும் நல்வாழ்க்கை ஒப்பென்று: சொல்வதற் குள்ளம் துடிப்பதனால் சொல்கின்றேன்; செய்கையுடன் பண்பு சிறந்திருக்கும் நன்மனையாள் மெய்வருடி இன்புறுத்தும் மென்தென்றற் - காற்றாவாள்; நண்ணி மயக்குறுத்தும் நன்மழலைச் செல்வங்கள் கண்ணைக் குளிர்விக்கும் வண்ண மலர்க் கூட்டங்கள்: பண்ணெழுப்பிப் பூத்தழுவிப் பாடுஞ் சுரும்பொலிகள் பெண்ணெழுப்பும் பாட்டில் பிணைந்த --- குரலிசையாம்; கொம்புத்தேன் தந்த கொழுஞ்சுவையை வாயிதழின் வம்புத்தேன் தந்து மகிழ்விக்கும்; ஆதலினால் நல்வாழ்க்கை ஒப்பாகும் நல்லமலர் சோலைக்கு: சொல்வார்க்குத் தோன்றாது செல்வார்க்குத் தோன்று மிது: தான்பிறந்த நாள்தொட்டுத் தண்மதியில் போயிறங்க வான்பறக்கும் நாள்வரையில் வாழ்க்கை ஒரு - போர்க்களந்தான்; அன்னை கருக்கொள்ளும் அப்பொழுதே கூடுமனு முன்னம் பொருதன்றே முற்றி உருவாகும்; பின்னர்ப் பிறந்து பிணிகளொடு போராட்டம் இன்னும் அளவிலா எத்தனையோ போராட்டம் மாந்தன் வரலாறே மாபெரும் போராட்டம் கவியரசர் முடியரசன் 0 59