பக்கம்:நெஞ்சிற் பூத்தவை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனி பொழியும் நிலவில்... துறைதோறுந் துறைதோறுந் தீமை செய்யும் துணிவுடைய மாந்தர்நிலை எண்ணி எண்ணிக் கறையேறித் துயரேறிக் கவலை யேறிக் காதோரம் நரையொன்று நிமிர்ந்து நிற்க முருகேறும் மலர்க்குழலாள் அதனைக் கண்டு,

  • முதுமை வர அறிவிப்போ?’ என ந கைத்தாள்: முறைகேடு கண்டதனால் கவலை விஞ்சி

முதிர்ந்துளதை அறிவிக்குஞ் சின்ன மென்றேன். "எதிர்வீட்டுப் பிள்ளைகளைப் பாரும் அத்தான், எழுந்தவுடன் புத்தகத்தை எடுப்பார் மாலைக் குதியாட்டம் முடிந்தவுடன் விளக்கை ஏற்றும் குறிப்பறிந்து புத்தகத்தைப் படிப்பார் ஈது மதியூட்டுஞ் செயலன்றோ? பெற்றோர் சொல்லை மதித்தொழுகும் பாங்கினைத்தான் பாரும்' என்றாள்; எதிர்காட்டுங் காலத்தில் முன்னேற் றங்கள் இருத்தலைமுன் னுணர்த்துகிற செயலி தென்றேன். 68 E கெஞ்சிற் பூத்தவை