பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே தெய்வத்தின் குரல்தான் என்றால் தீயிட்டு வேள்வி செய்வர் பொய்வைத்த புளுகு மூட்டைப் புராணத்தைச் சான்ற காட்டின் நெய்வைத்து நெருப்பு மூட்டித் து.ாள் பட நீறு செய்வர் மைவைத்த நெஞ்ச மெல்லாம் மண்ணொடு மண்ணாய்ப் போகும் எத்தனை நாள்கள் ஏய்ப்பர்? ஏய்ப்பரை நம்பி வந்தோர் எத்தனை நாள் பொ றுப்பர்? இருளிடை உழன்ற மக்கள் , புத்தொளிப் பொதுமை காட்டிப் புறப்படுங் கதிரைக் கண்டார்; இத்தரை முழுதுஞ் செம்மை எழில் நிறங் கொண்டு தோன்றும். 98