பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே தேவ தாசி' O நாதசுரம் எனுங் கருவி நற்றமிழர் கண்டதனை நாடு மெச்ச ஊதுவதில் வல்லோரை உயர்ந்த இசை வேளாளர் என்று ரைப்பர், வேதசுரர் இதுகண்டு வியர்க்கின்றார் வெறுக்கின்றார்; மேள காரர் ஈதொன்றே அவ்வினத்துக் கேற்றபெயர் மாற்றுவதேன்? என்றுஞ் சொன்னார் முப்புரியார் பிரமன்றன் முகத்துதித்தார் வேதபுரி முதல்வ ரானார் இப்படியேன் சொலல்வேண்டும்? இவர்க்கென்ன இடை யூறு? சாதி யெல்லாம் அப்படியே அமைத்திடவும் அவரினத்தை உயர்த்திடவும் ஆசை கொண்டு தப்புரைகள் உரைப்பவரைத் தாள் வணங்கி வாழ்த்துவதா தமிழன் பண்பு? 90