பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே பள்ளிசெலும் சிறுமியரைப் பகற்பொழுதில் இளைஞரினம் பகடி பேசி ്. எள்ளிநகை செய்கின்றார் இது கண்டு பெற்றோரும் இருக்கின் றாரே! பிள்ளைகளைப் பேணாது பெற்றவரும் இருந்துவிடின் பீழை யன்றோ? முள்ளுமரம் முற்றாது முளையிலதைக் கிள்ளுவதே முதன் மை வேலை. பிஞ்சுகளைப் பேணுவதும் பிழைசெய்யின் கடிவதுவும் பெற்ற வர்க்கே எஞ்சலிலாக் கடனாகும் எமக்கென்ன என்றவர்தாம் இருப்ப ரானால் மிஞ்சுவது தீமையன்றோ? மேன்மைநிலை விளைந்திடுமோ? வீனிற் பெற்றுக் கொஞ்சுவது போதிாது குடிமக்கள் ஆக்குவதும் கொள்கை யாகும் கோதுக்குட் போகாமல் குமுகாயம் மேலோங்கும் குறிக்கோள் கொண்டு, சாதிக்கோ உறவுக்கோ சார்ந்திருக்குங் கட்சிக்கோ தாழ்த லின்றி, நீதிக்கு மதிப்பளிப்போர் நேர்மைக்கு வழிவகுப்போர் நெஞ்சம் உள்ளோர் வீதிக்கு வீதியொரு குழுவமைத்து முயலுவரேல் விளைவு நன்றாம். 105