பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே தயக்கத்தால் கூச்சத்தால் தவறுகளைக் கண்டிக்கத் தவறி விட்டால் மயக்கத்தால் உழல்கின்ற மதியில்லார் கூட்டத்துள் வாழ்வேன் ஆவேன்; நயத்தைத் தான் அவர் மனத்தில் விதைக்கத்தான் நாடுகிறேன் நாணம் ஒன்றை . . நயக்கத் தான் நவில்கின்றேன்; 1.நல்லாராய் வாழ்வதைத் தான் நயந்து சொல்வேன் உள்ளாடை தெரியும் வணம் உடுத்துவதால் நாகரிகம்? உடலிற் பாதி ... = - 2தெள்ளாகத் தெரியும் வகை சீலைகளை ஒதுக்குவதா சீர்த்த பண்பு? கள்ளாலே மயங்குதல்போற் கன்னியர்கள் இடைவயிறு கானும் வண்ணம் தள்ளாடிச் சரிந்துவிழத் தானைகளைத் தளர்த்துவதா தாய்மைப் பண்பு? பவள இதழ் உடையரெனும் பாவையர்த்ாம் கற்றாளைப் பழத்தின் சாயம் தவழஅதிற் றடவிடுவர்; தளிர்விரலில் வளர்நகத்தில் தகத கக்கும் 4சிவலைநிறம் பூசிடுவர்; செம்முகத்தில் வெண்பொடியைத் தேய்த்து வைப்பர்; அவரவர்தம் நிலைக்கேற்ப ஆடையென ச் சிறுதுணியை Pஅசைத்து நிற்பர். _ 1. நல்லவராக, பெண்களாக 2. தெளிவாக 3 ஆடை 4. சிவப்பு நிறம் 5. கட்டி 107