பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்பாட்டிற் சிறந்து விளங்கும் மக்கள் வாழும் நாடுதான் விடுதலையை, மக்க ளாட்சி முறையை நுகர்ந்து, அதன் பயனை ப் பெற்று, இன் புற்று வாழ இயலும். மக்கட்பண்பு வளராத நாட்டில் விடுதலையால், மக்களாட்சியால் யாது பயன்? அங்கே இன்பமோ அமைதியோ மகிழ்ச்சியோ அரும்புவதுண்டோ? குரங் கின் கையிற் சிக்கிய மாலையாகி எல்லாரும் இந்நாட்டு மன்னராகிக் குடிகளே இல்லாத நாடாகி, இறுதியில் நாடு அம்மன்னர் கையிற் சிக்கிச் சீர்குலைந்து நிற்கும். இது நாடோறும் நாம் நேரிற் கண்டறிந்து வரும் உண்மை. உலகப் பொது மறையாம் திருக்குறளை வழங்கிய நாடு; இன்னும் நூற்றுக்கணக் கில் நீதி நூல்களை உருவாக்கிய நாடு; உள்ளத்தாற் பொய்யாதொழுகிய காந்தி யடிகளை அருளிய நாடு; சான் றாண்மை என்னும் சொல்லுக்கே இலக்கியமாக நின்ற தமிழ்ப் பெரியார் திரு. வி. க. வை ஈன்ற நாடு. சமுதாயச் சீர்திருத்தத்திற்காகவே வாழ்நாள் முழுதும் பாடுபட்ட பெரியார் பிறந்த நாடு; இன்னா செய்தார்க்கும் அவர் நாண நன்னயம் செய்த பேரறிஞர் அண்ணா தோன்றிய நாடு; இன்னும் எத்தனையோ சான்றோர்களைப் பெற் றெடுத்து, அதனாற் பெருமை கொண்ட நாடு, இற்றைநாள் மாந்தரின் இழி செயலால் பழிக்குள்ளாதல் முறையோ? 4.