பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே கையூட்டுலகம் Ο உலகிலே கையூட் டில்லா ஓரிடம் உண்டா? எங்கும் நிலவியே படர்ந்த டர்ந்து செழித்துயர் நிலையில் நிற்கும்; வலிவுறும் அஃதின் றாமேல் வாழ்க்கையே இயங்கா திங்கே; கொலைகளும் மறைந்து போகும் கொடுத்திடுங் கையூட் டாலே. இழிவெனக் கையூட் டேற்றல் எண்ணினர் அற்றை நாளில்; அழகெனக் கருது கின்றார் அனைவரும் இற்றை நாளில்; பழியெனப் பேசி, வாங்கக் கூசினர் பழைய மாந்தர் தொழிலது சரியே என்று சொல்லுவர் புதிய மாந்தர். 58