பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே அரசுசார் அலுவல் மன்றம், அருங்கலை வளர்க்குஞ் சாலை, புரையிலா நீதி மன்றம், புனிதமோ டேத்துங் கோவில், சிறையுறுங் காவற் கூடம் எங்குமே சென்று வெற்றி தருவது கையூட் டாகும் தடுப்பவர் எ வரு மில்லை. மறைவினிற் பெறுவ தில்லை மறந்துமே விடுவ தில்லை குறைவறத் தொகையைப் பே சிக் கொடுத்தபின் எதுவுஞ் செய்வர் நிறைவதை ஒருவர் மட்டும் கவர்ந்திடா நேர்மை யுண்டு பிறருடன் தகுதிக் கேற்பப் பகிர்வதே பெருவ ழக்கம். உரியதோர் கல்வி கற்றார் உயரிய பதவி பெற்றார் சிறியதாம் பணியி லுள்ளார் சீரிய கல்வி யில்லார் சரிநிக ராவர் வைக்கும் கையூட்டுச் சாமி முன்னர்; அரியதோர் செயலே யில்லை எதனையும் அதுவே செய்யும். 59