பக்கம்:நெஞ்சு பொறுக்கவில்லையே.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சு பொறுக்கவில்லையே தொட்டிலிற் றுயின்ற பிள்ளை தோள்களிற் கிடந்த பிள்ளை முட்டிய வயிற்றுப் பிள்ளை முதுமையிற் றளருந் தாயர் கட்டிய தாலி தொங்குங் கழுத்தினர் இளையர் என்னா தெட்டிய மட்டுங் கொன்றார் இழிந்தசிங் களத்து மாக்கள் ஆவணத் தெருவிற் கொள்ளை அளியவர் மனையிற் கொள்ளை காவலர் திருட ரானாற் களவுகள் நிற்ப தேது? தாவரும் மாந்த ரில்லம் தமிழர்தம் தொழிலார் கூடம் யாவையுஞ் சாம்ப ராக ஆணவத் தீயர் செய்தார் பகலிலே கொள்ளை யிட்டார் பதறிடக் கொலைகள் செய்தார் தகவிலார் சிங்க ளத்தார் தணிவிலா வெறிய ராகி மகளிர்தங் கற்பைத் தின்று விலங்கென மாறி நின்றார் பகிர்ந்திடும் உரிமைக் காகப் பாடெலாம் நீவிர் பெற்றீர் 92