பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாரைக் கூட்டங்களோடு எழுந்து, எவ்விடங்களிலும் கவர்ந்து கொள்வதற்கு வாய்ப்பாகக், கயல் மீன்கள் சுழல் இட்டு ஓடும் தெளிந்த நீர் ஓட்டத்தை எதிர்த்து ஏறுமாறு, மிக்க நீரைப் பொழிந்துவிட்டமையால், பெய்யும் தன்மை வறண்டு, எழுந்த பொங்கும் வெண்மேகங்கள், அகன்ற பெரிய வானத்தே. சிறுசிறு துவலைகளாகத் தூவும் தொழிலைக் கல்லா நிற்க.

அழகிய பரந்து அகன்ற வயல்களில், மிக்க மழைநீரால் செழித்து வளர்ந்த வளமான இலைகளையுடைய நெல்லில் இருந்து வெளிப்படும் க தி ர் க ள் பாரம்மிகுதியால் குலை தலைவணங்க, பருத்த அடியினை உடைய பாக்கு மரத்தின், நீலமணியை ஒத்த நிறம்காட்டும் கழுத் தி ல், பருத்த மடலிலிருந்து பாஷையாக விரிந்து, திரட்சியைக்கொண்ட பெரியதாறுகளில், நுண்ணிய நீர்திரளும் படியாகப் பருத்து, பக்கங்கள் திரண்டு தெளிந்த நீரையுடைய பச்சிளங்காய்கள் இனிமை கொள்ளும்படி முற்ற.

அடர்ச்சியைத் தன்னிடத்தே கொண்ட ம ன ல க் கு வடுகளிடத்தவாய, பல்வேறு மணமும், நிறமும் கலந்த மலர்களைக்கொண்ட, இடம் அகன்ற பெரிய மலர்சோலை களில், குளிர்ச்சியையும், தளர்ச்சியையும் உடைய கொம்புகள் இடத்தளவாய, பன்நிறம் காட்டும் நீர்த்துளிகள், இடை விடாமல் வீழ்ந்து கொண்டிருக்க.

மாடமாளிகைகள் உயர்ந்த, பல்வேறு வளங்களையும் கொண்ட பழைய ஊரின் கண், ஆறுகிடந்தாற் போன்ற, அகன்ற நெடிய தெருக்களில், தாமரை, குவளை, கழுநீர் முதலிய மலர்களோடு, தழை கலந்து தொடுத்த தலை மாலையையும், பருத்த, அ ழ கி ய, வலிய முறுக்கேறிய தோளினையும், நிரம்பிய மெய் வலிமையினையும் உடைய

89