பக்கம்:நெடுநல்வாடை-மனையுறை புறாக்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கலிவெண்பா, 9) திருக்கண்ணப்பர் தேவர் திருமறம் ஆகிய ஒன்பது நூல்களும் நக்கீரர் பாடியவை என்ப. இது ஆய்வுக்கு உரியது. இறையனார் எழுதிய களவியலுக்கு, உரை எழுதியவர் நக்கீரரே.

திருவிளையாடற் புராணமும், காளத்திப் புராணமும், நக்கீரர் பற்றிய பலகதைகளைப் புனைந்துரைத்துள்ளன. திருவிளையாடற் புராணம் 'கொங்கு தேர் வாழ்க்கை ’’ என்ற குறுந்தொகைப் பாடல் ( பாட்டு : 2 ) குறித்த கதையையும் காளத்தி புராணம், திருமுருகாற்றுப்படை பாடப்பட்டது. குறித்த கதையையும் கூறுகின்றன; அவை இரண்டுமே நம்ப இயலாதன; உண்மைக்கு மாறானவை எனச் சுருங்கக்கூறி முடிக்கின்றேன். விரிவான ஆராய்ச்சி மேற்கொள்ளின் ஏடு விரியும்,