பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

187

நெருப்புத் தடயங்கள்

மண்டையன் மீண்டும் நடுங்கப்போனபோது, கில்லாடியார் அவனைப் பிடித்து, தன் வசமாக்கிக் கொண்டு “நீ மனுஷனே இல்லடா. வடக்குத் தெரு தமிழரசியைப் பற்றி எப்போ ஆசைப்பட்டியோ, அப்பவே நீ மனுஷன் இல்ல. வா... வா... தாமோதரன் இந்த பொன்மணி சொன்னபடி ஆடுற ஆள் இல்ல. அப்படியே கோபப் பட்டார்னால், இந்த வினைதீர்த்தான் பயலை வச்சுச் சரிக்கட்டலாம். நீ இப்போ வா. நான் செட்டு சேத்துட்ட நேரம்; சீட்டுக்கட்டு அப்டியே கிடக்கு. வாடா! வாறேன் தமிழு, வாறேன் மச்சான், வாறேண்டா வென’” என்று சொன்னபடியே, மற்றவங்களை நகர்த்தியபடி, நகர்ந்தார்.

பகவதியம்மா, மகள் தலையில் படிந்த வைக்கோல் தும்பை தட்டிவிட்டபடியே, “சரி, மொதல்ல சாப்பிடு. வாம்மா” என்றாள்.

தமிழரசிக்கும் பசியோ பசி.

வினைதீர்த்தான் “இந்தா தமிழு வாழை இலை. ஒனக்காவ கொண்டுவந்தேன்” என்று சொன்னபோது, தமிழரசி, சரியான உயரமும், அரையடி அழுத்தமும் கொண்ட வினைதீர்த்தானையே பார்த்தாள். சித்தப்பாவுக்கும், இவனுக்கும் எவ்வளவு வித்தியாசம்? என் மேலதான் இவனுக்கு எவ்வளவு பிரியம்? இருந்தாலும் அன்பை அடிதடி மூலமாகவா காட்டுறது?

பகவதியம்மாள், சமையலறைக்குள் போய்க்குரலிட்டாள்:

“எத்தன தடவம்மா சாதத்தை சூடாக்குறது? வாம்மா...”

தமிழரசி, வினைதீர்த்தான் மீது நாட்டிய கண்களை எடுத்து விட்டு, அம்மாவைப் பார்ப்பதற்காக, அரைவட்டமாகக் கண்களைச் சுழற்றியபோது—

வெளியே சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் போய்க் கொண்டிருந்தான். வாசலுக்கு முன்னல் சிறிது நின்று