பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

நெருப்புத் தடயங்கள்

ஒங்க மனசுல என்னய்யா நெனச்சுக் கிட்டீங்க? இவங்க சிந்துன ரத்தத்துக்கு இப்பவே நீங்க பதில் சொல்லியாகணும்?’’

போலீசார் திடுக்கிட்டார்கள். எவள் பாதுகாப்பாக இருந்து, எவனாவது மேலதிகாரிகளுக்கு பெட்டிஷன்” போட்டால் காபந்தாக இருப்பாள் என்று நம்பி, அந்த நம்பிக்கையில் நடவடிக்கை எடுத்தவர்கள், அவளை, அரண்டுபோய் பார்த்தார்கள். தமிழரசி, பேசிக் கொண்டே போனாள்:

“ஒங்களுக்கும் அக்கா தங்கச்சி இருப்பாங்கல்ல? நீங்களும் இந்த மாதிரி ஒரு கஷ்டப்பட்ட குடும்பத்துல பிறந்திருக்கத்தானே செய்வீங்க? நீங்க அடிச் சதை நீங்களே பாருங்க. ஒரு மனிதைேட டிக்னரிட்டியை பாதிக்கிறபடி எதையும் செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. ஒங்களுக்கு யாருய்யா இந்த உரிமை கொடுத்தது? பதில் சொல்லுங்கய்யா. எங்க சித்தப்பாவையும், என் தங்கச்சியையும் இப்டி அடிச்சதுக்கு யாருய்யா பட்டா கொடுத்தது? எவன்யா கொடுத்தான்?” -

சப்.இன்ஸ்பெக்டர் திகைத்து திக்குமுக்காடினார். அவருக்கு எதுவும் ஒடவில்லை. தொழில் சகாவான தாமோதரனுக்கு உதவுவதற்காக வந்து, உபத்திரவத்தில் மாட்டிக் கொண்டதைப் புரிந்து கொண்டார். அடிபட்டவர்கள் தமிழரசிக்கு நெருங்கிய உறவினர்கள் என்று தன்னிடம் சொல்லாத முத்துலிங்கத்தைப் பல்லைக் கடித்த படியே பார்த்தார் மாறிய நிலைக்கு தன்னை மாற்ற முடியாமல் திண்டாடினர்.

இதற்குள் ஆங்காங்கே சிதறிநின்ற மக்கள் ஒன்று பட்டார்கள். முதலில் தமிழரசியை வியப்போடு பார்த்தார்கள். தத்தமக்குள் பேசிக் கொண்டார்கள். அப்புறம் பொதுப்படையாக, மெலிதாய் பேசினர்கள். முனங்கல்கள் முணுமுணுப்பாகி, மூர்க்கமான வார்த்தைகளாயின.