பக்கம்:நேசம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜா ராணி ஒரே ஒரு ஊரில் ஒரு ராஜாஅடேயப்பா, உஸ்!-ரொம்ப நாளாச்சு இதுமாதிரி ஆரம்பிச்சு. ஆ அப்படி வாருங்கள் வழிக்கு! அத்தனை முகமும் இந்தப் பக்கம் திரும்பினர்களா? பெரியவர்களிலிருந்து சிறியவர்களிலிருந்து ராஜா ராணி கதை பிடிக்காதவர் யார்? குழந்தைகளைக்கூட நம்புவதற் கில்லை. ஆயிரம் கேள்வி கேட்கிறதுகள். "அது எப்படி அப்படி நடக்கும்? போ தாத்தா, காது குத்தறே!’ன்னு மரியாதைகூட அடகு போய்விடுகிறது. ஆனால் இன்று நாட்டு நடப்பின் தினசரிச் சுழலினின்று: தப்ப, சற்று நேரம் எதிலேனும் வழி கிடைத்தால் சரி என்று தேடுபவர்களுக்கு. -ஒரு ஊரில் ஒரு ராஜா. ராஜாவுக்கு ஒரு ராணி ஒரு ராணிதான். ராணி வருமுன், ராஜா ராஜகுமாரனாயிருக்கையிலேயே, மிகப் புத்திமான் என்று பேர் வாங்கிவிட்டான். யானை யேற்றம், குதிரையேற்றம், வில்லேற்றம், திக்விஜயம் செய்த விடமெல்லாம் அவன் கொடியேற்றம் ஏற்றங்களோடு ஏற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/125&oldid=798837" இலிருந்து மீள்விக்கப்பட்டது