பக்கம்:நேசம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144லா. ச. ராமாமிர்தம்


தால பிரகாஷ் ஐஸ்கிரீம் பார் உள்ளே நுழைந்த நான் ஒரு மேஜையில் உட்கார்ந்து கொண்டேன். ஐஸ்ட் காஃபி என்கிறார்களே எப்படி இருக்கும்? அசடு வழியுமா? மரியா தையாக ஹாட் காஃபியே சாப்பிட்டு விடலாமா? "ஓ கட்டில் வாங்கும் என் சிநேகிதரா?" என் யோசனை வெடுக்கென்று கலைந்து தலை நிமிர்ந்தால் நீ! என் அழைப் பிற்குக் காத்திராமலே எதிரேயும் உட்கார்ந்துவிட்டாய் உனக்கு முகத்தில் தனிச் சிவப்பு. கட்டில் வாங்கியாச்சா?” "ஏன் உலகத்திலேயே உன் ஒரு கட்டில்தானா?” "கொயட் ரைட், எத்தனை எத்தனையோ கட்டில்கள் ட்ரபிளும் அதுதான்.” 'இல்லை கீழே பாயில் படுத்தால் ஆகாதா?” "உண்மை, உண்மை இதைக் கட்டில் வாங்கு முன்பே தெரிந்துகொண்டால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. வாங்கிய பின் உணர நேர்ந்தால் பரிதாபத்திற்குரியவர்.” "டாம் பு!” உனக்கு எப்படித் தெரிந்தது? எனக்குத் தொண்டை வடியில் கசந்தது. ஏனெனில் அப்பொழுதுதான் எனக்கும் லானோவுக்கும் இடையில் வேஷங்கள் ஒவ்வொன்றாய் படிப் படியாய்க் கலைந்து கொண்டிருந்தன. எங்களுக்கு எத்தனை எத்தனை;முகங்கள்! முகத்தினடி வில் அதனடியில் இன்னொரு முகம். "என்ன சாப்பிடுகிறீர்கள்?’’ ‘'நீ வாங்கிக் கொடுத்து நான் சாப்பிடும் நிலை இன்னும் விரவில்லை. நீ என்ன சாப்பிடுகிறாய்?" நான் எப்பொழுது நீக்கு நழுவினேன். நீ கண்டுகொண்ட தாகவே தெரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/150&oldid=1403602" இலிருந்து மீள்விக்கப்பட்டது