பக்கம்:நேசம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்புள்ள ஸ்நேகிதிக்கு147


ஒரொரு சமயத்தில் நீ வீணை வாசிப்பதுபோலவும், ஒரு ரோஜாப் பூவினை முகர்ந்துகொண்டு என்னைப் பார்த்துச் சிரிப்பதுபோலவும் இதுபோல ஏதேதோ பாவனைகள் மனம் அதன் பேதமையில் ஜோடனை செய்து பார்த்து மகிழ்ந்து அல்லது வேதனையுறும் அலங்காரங்கள். ஆனால் உன்னை நான் பார்க்கும் ஃபேவரட் போஸ் இதுதான். எதுகுல காம் போதியில் முசிறி ரிக்கார்ட். கடைசியாக அதில் ஒரு அடி வருகிறது. ராஜராஜ ராகவ பிரபோ தியாகராஜ அச்சிதப் பிரயோ இரு கைகளையும் சிரம்மேல் குவித்து உன்னை மறந்து ஒரு காலில் நிற்கிறாய். - அம்பாள் தயஸ் இருக்கிறாள். ஹே. இதயக்கமலவாசா கவுரவர் சபையில் துச்சாதனன் துகிலுரிய கண்ணை மூடிவிட்ட த்ரெளபதி: சமுதாயத்தைச் சீறும் அபினக் காளி! அமலி ஸ்ரிமபநிஸா. மறுபடி எப்போ அமலி? ஆ. இரண்டு மாதங்களுக்குப் பிறகு வுட்லாண்ட்ஸ் கார்டன் ரெஸ்டாரண்ட், நான் வெளியே வந்துகொண்டிருந்தேன். நீ உள்ளே நுழைந்துகொண்டிருந்தாய் இரண்டு வாலிபர்களிடையே அவர்கள் தோள்மேல் தொங்கிக்கொண்டு என்னவோ ,ேஒது. சிரித்துக்கொண்டு. நீ என்னைப் பார்க்கவில்லை. எனக்கு உன்மேல் நெஞ்சு குமுறவில்லை. துக்கம் தொண்டையை அடைத்தது. என்னென்ன விதமாய் அமெரிக்காவை, பழி வாங்க முயன்றுகொண்டிருக்கிறாய் அமலி? -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/153&oldid=1403605" இலிருந்து மீள்விக்கப்பட்டது