பக்கம்:நேசம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26லா. ச. ராமாமிர்தம்


'ஓ' குட்டி உன் பேர் என்ன? அபிதா' 'அம்மா ஆபிசிலிருந்து வரவரைக்கும்?" 'நான், இவள் மாமா பெண் என் பே புவனா பேச்சை எடுத்துக்கொண்டாள். புவனா" - இவன் முரளி, என் தம்பி, நாங்கள் அடுத்த தெருவி விருக்கோம், அத்தை இப்போ ஆபிசிலிருந்து வர நேரமாச்சு, அதான் வந்திருக்கோம்.' 'அபிதா அப்பா?’’ 'அப்பாவுக்கு ஊரிலே ஆபிஸ், இன்னிக்கு ஊரிலிருந்து வவ்வா. எனக்கு ஜாங்கிலி வாங்கிண்டு வவ்வாளே!’ 'முரளிக்கும் வாங்கிண்டு வருவாளே! --முரளி தன்னைச் சுட்டி காட்டிக்கொண்டான். அவனுக்குக் கடை, வாயில் எச்சில் வழிந்தது. போடா, நோக்குக் கிடையாது. எங்கப்பா எனக்குத் தான் வாங்கிண்டு வவ்வா....-அபிதா புருவங்கள் நெரிந்தன. அவனை அடிக்கப் போய்விட்டாள், சித்திரம் கசங்கினாற் போல், அவள் முகம் சட்டென மாறிவிட்டது. 'குழந்தைகளா, சண்டை போடாதேங்கோ இந்: தாங்கோ, அப்பா வரவரைக்கும் ஆளுக்கொரு சாக்லேட்." புவனா வாங்கிக்கொண்டாள். முரளிக்கு அவசரம் தாங்கவில்லை; வாங்கினதும் வாங்காததுமாக, மேல் ஜிகினாவைப் பிரித்து வாயில் திணித்துக்கொண்டு, சுவாதீனமாக அவர்மேல் உராய்ந்தான். அபிதா, கையை நீட்டிவிட்டு, பிறகு தயக்கத்துடன் பின் வாங் இக்கொண்டாள். என்ன யோசனை?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/32&oldid=1403468" இலிருந்து மீள்விக்கப்பட்டது