பக்கம்:நேசம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40லா. ச. ராமாமிர்தம்


அந்தரத் தந்தியில் மந்திரத் தும்புரு: தந்திர ப்ருகடை தந்தினத்தனதான். ஏமேமோ பழக்கமிலா வார்த்தைகள், ஓசைகள். காலம் கடந்த நித்திரை கலந்து அவன் நரம்புகளில் விழித்தெழுந்த மாதிரியிருந்தது. இவர் என்னை என்ன பண்ணிக்கொண்டிருக்கிறார்? இந்த இன்ப பயங்கரம், இந்த நிலை இன்னும் சற்று நீடித் தால் நானே எனக்கில்லாமல் போய்விடுவேனோ? எனக்கு நான் வேணுமே! என் வீடு, என் கிரிஜா, என் அபிதா, என் அம்மா, இந்த மொலாய்க் தரை, கொல்லைப்புறத்தில் துளசிமாடம், வாழைக்கன்று. தென்னங்கன்று, செம்பருத்தி: மல்லி, வேலிதாண்டி அதை மேயும் ஆடு எல்லாமுந்தான்நான் சர்வ சாதாரணமானவன். பாமரங்கள்தான் என் படுகை துறவு எனக்கு வேண்டாம், வேனவே வேண்டாம் தன்னைக் கவியும் அழுத்தத்தை அசுரப்ரயத்னம் தந்த அரக்கபலத்தில் குஹை வாயை மூடிய பாறாங்கல்லைத் தள்ளுவதுபோல் உதறினான். தன்னை அடித்துச்செல்லும் வெள்ளத்தில் கைநழுவும், பாமரங்களின் நினைவுக் கிளையை, கரைப்புல்லை, உயிர்ப்பிடியை மீண்டும் பற்றும் முயற்சியில், பேச்சை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தான். "ஆச்சு, நாங்களும் வயதுக்கு வந்து அவா அவா அச்சில் விழுந்தாச்சு. தம்பி, பிலாயில் இருக்கிறான். தங்கையைக் கோயமுத்தூரில் கொடுத்திருக்கிறது. அவளுக்கு பிரசவம் பண்ண அம்மா போயிருக்கா. சீடை, முறுக்கு, பருப்புப் பொடி, திரட்டுப்பால்...இல்லையா, இத்யாதிகளுடன். அம்மா ஒரு கவலையில்லா மனுஷி! அப்பாவைப்பற்றி அவள் கிணுங்கவேயில்லையே! "செத்தவா பின்னாலேயே நாமும் போயிடறோமா? உடன்கட்டையேர்ற காலத்திலிருக்கறதா உங்கப்பா நினைச் சுண்டிருக்கா. ஏதோ திமிர்பிடிச்சுத் தன் பொறுப்பெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நேசம்.pdf/46&oldid=1403478" இலிருந்து மீள்விக்கப்பட்டது