இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
துடிது டித்த மகனையே
தூக்கி அணைத்த அன்னையும்
தடித்துப் போன இடங்களைத்
தடவிக் கொடுத்தாள் பாசமாய்.
வலியைப் போக்க அன்னையும்
மருந்து போட்டாள் தினமுமே.
சிலநாள் சென்றே ஜவஹரும்
சிகிச்சை முடிந்து தேறினார்.
“நல்ல வழியில் நானுமே
நடக்க வேண்டும் என்பதில்,
அல்லும் பகலும் தந்தையார்
ஆர்வம் செலுத்தி வந்ததால்,
தவறு செய்த என்னையே
தண்டித் தாரே அந்தநாள்.
அவரைப் போன்ற நல்லவர்
எவரும் இல்லை,” என்றனர்.