பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நல்ல கதைகள்


இந்திய நாட்டின் பெருமையெலாம்
எடுத்துக் காட்டும் கதைகளையே
அன்னையும் பெரிய தாயாரும்
அன்பாய்க் கூறுவர் ஜவஹரிடம்.

இராமா யணமும் பாரதமும்
இன்னும் பலப்பல கதைகளுமே
சீராய்ச் சிறப்பாய்க் கூறிடுவர்;
சிறுவர் நேரு கேட்டிடுவர்.

முபாரக் அலிஎனும் ஒருபெரியார்
வீட்டில் கணக்குகள் எழுதுபவர்,
அபார மாகக் கதைசொல்வார்.
அவரை மிஞ்சவே ஆள் இல்லை!

அரபுக் கதைகள் அவர்சொல்வார்;
‘அற்புதம்' என்பார் ஜவஹர்லால்.
இரவில் சிறிதும் தூங்காமல்
எத்தனை யோகதை கேட்டிடுவார்;

22