பக்கம்:நேரு தந்த பொம்மை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தீரரின் கதைகள் கேட்டிடுவார்.
தியாகிகள் கதையும் கேட்டிடுவார்.
நேரினில் காண்பது போல் அந்த
நிகழ்ச்சிகளெல்லாம் உணர்ந்திடுவார்.

ஆங்கில நாட்டார் இந்தியரை
அடிமைப் படுத்திய கதைகேட்டார்.
தீங்குகள் எல்லாம் எவ்வாறு
செய்தனர் என்றும் தெரிந்திட்டார்.

வெள்ளையர் இரக்கம் இல்லாமல்
மிகவும் கொடுமைப் படுத்தியதை
உள்ளம் நொந்தே கேட்கையிலே
உணர்ச்சி பொங்கும் ஜவஹருக்கே.

அப்பாவுக்கே அடுத்தபடி
அலியை நேரு மதித்திடுவார்.
எப்போ தும் அவர் பக்கத்தில்
இருந்திட மிகவும் விரும்பிடுவார்.

23