பசி கோவிந்தம் 63
எச்சரிக்கிருர்-அனுபவம் மிக்க எச்சரிக்கை: அவசியம் மிக்க எச்சரிக்கையுங்கூட.
ஏனென்ருல், ஆணும் பெண்ணும் ஒருவரை யொருவர் கெருங்கியவுடனே செயல்படுவது மேல் காட்டில் குறைவாகவும் கீழ் காட்டில் அதிகமாகவும் இருக்கிறது-இதற்கு என்ன காரணம்?
மேல் நாட்டார் பெண்ணில் மட்டும் அல்லஅருங்கலைகள், ஆடல் பாடல்கள், இயற்கைச் செளக் தரியங்கள்-ஆகியவற்றிலும் இன்பங் காண லாயக் குள்ளவர்களாயிருக்கிருர்கள். கீழ் காட்டாரோ அப்படி யல்ல; அவர்களில் பெரும்பாலோர் பெண்ணைத் தவிர வேறு எதிலுமே இன்பங் காண லாயக்குள்ளவர்களா யில்லை!’ என்று நாம் சொல்லிவிட்டால் மட்டும் போதுமா? அவர்களுடைய பரிதாப நிலைக்குப் பரிகாரம் தேட வேண்டாமா?- இதோ ஆசான் தேடுகிருர்:
கஞ்சிக்காகக் கற்பை
அஞ்சிவிற்கும் பெண்கள், காசுக்காகக் கற்பைப்
பேசி விற்கும் பெண்கள், வஞ்சகர் பசப்பில்
வழுக்கி விழும் பெண்கள், நஞ்சு தோய்ந்த பெண்களாம்,
நாட வேண்டாம், அவர்களே!
சொல்லிவிட்டார், ஆசான்-இனி எந்த முறையில் செயல்பட வேண்டுமோ, அந்த முறையில் செயல்படு வீர்களாக!