பக்கம்:பசி கோவிந்தம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பசி கோவிந்தம் 63

எச்சரிக்கிருர்-அனுபவம் மிக்க எச்சரிக்கை: அவசியம் மிக்க எச்சரிக்கையுங்கூட.

ஏனென்ருல், ஆணும் பெண்ணும் ஒருவரை யொருவர் கெருங்கியவுடனே செயல்படுவது மேல் காட்டில் குறைவாகவும் கீழ் காட்டில் அதிகமாகவும் இருக்கிறது-இதற்கு என்ன காரணம்?

மேல் நாட்டார் பெண்ணில் மட்டும் அல்லஅருங்கலைகள், ஆடல் பாடல்கள், இயற்கைச் செளக் தரியங்கள்-ஆகியவற்றிலும் இன்பங் காண லாயக் குள்ளவர்களாயிருக்கிருர்கள். கீழ் காட்டாரோ அப்படி யல்ல; அவர்களில் பெரும்பாலோர் பெண்ணைத் தவிர வேறு எதிலுமே இன்பங் காண லாயக்குள்ளவர்களா யில்லை!’ என்று நாம் சொல்லிவிட்டால் மட்டும் போதுமா? அவர்களுடைய பரிதாப நிலைக்குப் பரிகாரம் தேட வேண்டாமா?- இதோ ஆசான் தேடுகிருர்:

கஞ்சிக்காகக் கற்பை

அஞ்சிவிற்கும் பெண்கள், காசுக்காகக் கற்பைப்

பேசி விற்கும் பெண்கள், வஞ்சகர் பசப்பில்

வழுக்கி விழும் பெண்கள், நஞ்சு தோய்ந்த பெண்களாம்,

நாட வேண்டாம், அவர்களே!

சொல்லிவிட்டார், ஆசான்-இனி எந்த முறையில் செயல்பட வேண்டுமோ, அந்த முறையில் செயல்படு வீர்களாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/65&oldid=590929" இலிருந்து மீள்விக்கப்பட்டது