பக்கம்:பசி கோவிந்தம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்த்து!

"பாரதம் வாழி, பாரதம் வாழி!

பசிகோவிந்தம் பாடப் பசிதந்த

பாரதம் வாழி! தாய்த்தமிழ் வாழி, தாய்த்தமிழ் வாழி!

தரித்திரத்தில் சரித்திரப் பெருமைபெற்ற

தாய்த்தமிழ் வாழி!”

வாழ்க்கைப் பாதையில் குறுக்கிடும் பெருங்கடல் வாலிபம்: பசிமிக்க பாரதத்தில் வறுமை மிக்கோர் அதைக் கடப்பது கடினம். ஆயினும், வயலில் சிறு வாய்க்காலைத் தாண்டுவதுபோல வாழ்க்கையில் சிலர் வாலிபக் கடலைத் தாண்டிவிடுகின்றனர். அதற்கேற்ற வசதியும் அவர்களுக் குப் பரம்பரை பரம்பரையாகவே இருந்து வருகிறது. சுயாதீனத்தால் சோம்பேறித்தனத்தையும், சுகானுபவத் தால் சொர்க்கலோக இச்சையையும் வளர்த்து வரும் அவர் களுடைய பரம்பரைச் சொத்துக்களைப் பராதீனப்படுத்தி, பசிக்குப் பலியாகும் கோடானு கோடி மக்களைப் பாது காக்க ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் எழுந்ததே இந்தப் பசி கோவிந்தம் பாட்டு.

பசி வேறு, பக்தி வேறு என்று பக்குவமடையாத சிலர் பேசுவதுண்டு. எடுத்த விஷயத்தைக் குழப்பி, ஏமாந்த வரை லாபம் என்று கருதுவோர் அப்படிப்பட்ட சொற் ருெடர்களை ஆங்காங்கே பிரயோகப்படுத்துகிரு.ர்கள்; அவற்றைப் பார்த்து நீங்கள் மயங்கிவிடக்கூடாது. எதை யும் ஊன்றிப் படிக்கவேண்டும்; தவருண பொருளை எடுத்துக் கொண்டு ததிங்கிணதோம் போடக்கூடாது. பசியும் பக்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பசி_கோவிந்தம்.pdf/7&oldid=590871" இலிருந்து மீள்விக்கப்பட்டது