பக்கம்:பச்சைக்கனவு.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாற்கடல் ( 103

ஒரு ஸ்டே'ஜிக்குப் பிறகு அநுபவிக்கிற விஷயமில்லை. வழியில்லாமல் ஸஹித்துக் கொள்ளும் சமாசாரம்தான். உங்களுக்கும் எனக்கும் மெளனமாயிருக்கிற வயசா? இநஞ்சக் கிளர்ச்சியை ஒருவருக்கொருவர் சொல்லச் சொல்ல, அலுக்காமல், இன்னமும் சொல்லிக் கொள்ளும் நாளல்லவா? நீங்கள் ஏன் இப்படி வாயில்லாப் பூச்சியா யிருக்கிறேள்? நீங்கள் புருஷாள். உங்களுக்கு உண்மையி லேயே விரக்தியிருக்கலாம். நான் உங்களைவிடச் சின்னவள்தானே! உங்கள் அறிவையும் பக்குவத்தையும் என்னிடம் எதிர்பார்க்கலாமா? உங்களுக்காக இல்லா விட்டாலும் எனக்காகவாவது என்னுடன் நீங்கள் பேசணும். எனக்குப் பேச்சு வேணும். உங்கள் துணை வேணும். ஐயையோ, இதென்ன உங்களைக் கையைப் பிடித்து இழுக்கிற மாதிரி நடந்துகொள்கிறேனே! என்னை மன்னிச்சுக்கோங்கோ, தப்பா நினைச்சுக்காதேங்கோ. ஆனால் எனக்கு உங்களையும் என்னையும் பற்றித் தவிர வேறு நினைப்பில்லை, நானும் நீயும் எனும் இந்த ஆதாரத்தை ஒட்டின சாக்குத்தான் மற்றதெல்லாம் எனக்கு. இதைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டால், எழுத வந்ததுகூட மறந்து விடுகிறது.

ஆனால், நானும் நீங்களும்' என்று எல்லாம் எண்ண அம் எழுதவும் சுவையாயிருந்தாலும் குடும்பம் என்பதை எங்கே ஒதுக்கிவைக்க முடிகிறது, அல்லது மறந்துவிட முடிகிறது? குடும்பம் என்பது ஒரு rராப்தி, அதிலிருந்து தான் லக்ஷ்மி, ஐராவதம், உச்ரவஸ் எல்லாம் உண்டா கிறது. குடும்பத்திலிருந்து நீங்கள் முளைத்ததனால்தானே எனக்குக் கிட்டினர்கள்? ஆலகால விஷமும் அதிலிருந்து தான்; உடனே அதற்கு மாற்றான அம்ருதமும் அதில்தான். ஒன்றுமில்லை, அல்ப விஷயம்; இந்தக் குடும்பத்தி விருப்பதால்தானே, தீபாவளியை நான் அநுபவிக்க முடிகிறது! நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள்.

எனக்குத் தோன்றுகிறது. நானும் நீயுமிலிருந்து பிறந்து பெருகிய குடும்பத்தில் நானும் நீயுமாய் இழைந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/112&oldid=590770" இலிருந்து மீள்விக்கப்பட்டது