பக்கம்:பச்சைக்கனவு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாகடிாயனி C 67

'எனக்குக் கடிதம் போட யார் இருக்கிறார்கள்? இனி எனக்கு வரவேண்டிய ஒலை ஒன்றுதான் பாக்கி. அது வந்ததும் அதற்குப் பதில் போட முடியாது. நானே கிளம்பியாக வேண்டும்.' -

'சரி சரி, உங்களோடு பேசினால், மூச்சுவிடாமல் இப்படித்தான் தர்க்கம் பண்ணுவீர்கள். அவள் குரல் கடுகடுத்தது. வெள்ளிக்கிழமையும் அதுவுமாய் நாக்கில் நரம்பில்லாமல் வெடுக்கென அச்சானியமாய் ஏதாவது சொல்வீர்கள். உங்கள் உடம்பு இருக்கும் நிலைக்கு எனக்குத்தான் தாங்காது. அதனால் நானே தணிந்து போகிறேன்.”

"நான் கிருதார்த்தனானேன். என் அகமுடையாள் எனக்குத் தணிந்து போகிறாள். என் ஜன்மம் சாபல்யம் அடைந்தது.'

"எனக்கு வந்தது இதுதான், இந்தாருங்கள்!” கடிதத்தை மடியிலிருந்து எடுத்து அவனிடம் நீட்டினாள். அதை வாங்கிப் பிரித்தான். கண்கள் வரிகள் மேல் ஓடின.

அது அச்சடித்த திருமண அழைப்பு. அதைக் கையில் பிடித்துக்கொண்டே திரும்பி, பாலத்தின் கட்டத்தின்மேல் சாய்ந்தான். இருவரும் மெளனமாய்க் கீழே ஒடும் ஜலஜரிகையைப் பார்த்துச் சிந்தித்துக்கொண்டிருந்தனர். இப்பொழுது வெய்யில். மழை வரட்டும்; கரை அடங்காது.

'ஊம், பத்மாவுக்குக் கல்யாணமாக்கும்!" 'பத்திரிகை உங்கள் கையில்தான் இருக்கிறது.' 'ஹ'இம், உன் தங்கை அழகி அல்லவா? அவன் இன்னும் ஜலத்தையேதான் பார்த்துக்கொண்டிருந்தான்.

"அதைப்பற்றிச் சந்தேகம் வேறேயா? இப்போது பட்டுவை நான் பார்த்து எட்டு வருஷங்களாச்சு. உற்ற வயசு, இன்னும் நன்றாய்த்தான் இருப்பாள்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பச்சைக்கனவு.pdf/76&oldid=590734" இலிருந்து மீள்விக்கப்பட்டது