பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 செய்யப்படும் ஒப்பந்தத்திலாவது, வேலையிலாவது தெரிந் திருந்தே சுயலாபம் அடைவாராகில், அவர் இந்தியன் பீன்ல் கோட் 168-வது பிரிவின்கீழ் குற்றம் புரிந்தவராகக் கருதப்படுவார். ஆல்ை, எந்த நபரும் அவர் ஒரு கம்பெனயில் பங்கு தாரராவது, அங்கத்தினராகவாவது இருக்கும் காரணத் தால்-அவர் அந்தக் கம்பெனியின் டைரக்டராக இருந்தா லன்றி-அந்தக் கம்பெனிக்கும் பஞ்சாயத்துக்கும் அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்ஸிலுக்கும் ஏற்பட்டிருக்கும் ஒப்பந்தத்தில் பற்றுதல் உள்ளவராக இருப்பதாக கருதப்படக் கூடாது. 184. நிர்வாக அதிகாரி அல்லது கமிஷனர் அல்லது பிரதிநிதியையாவது சட்ட விரோதமாக தடுத்தல் நிர்வாக அதிகாரி அல்லது, கமிஷனர் அல்லது அவர் களிடம் அதிகாரம் பெற்றவரை ஒரு இடம், கட்டிடம் அல்லது நிலத்தில் பிரவேசிப்பதற்கு தமக்குள்ள அதிகாரத்தைச் சட்டப்படி செலுத்த வொட்டாமல் யாராவது தடுத்தால், அவர் இந்தியன் பீனல் கோட் 341-வது பிரிவின்கீழ் குற்றம் புரிந்தவராகக் கருதப்படுவார். 185. பஞ்சாயத்துகள், பஞ்சாயத்து யூனியன் கவுன்சில்கள் முதலியவற்றுக்கு இடைஞ்சல் உண்டாக்குவதை தடுத்தல் ஒரு பஞ்சாயத்தையாவது அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்லிலேயாவது அல்லது பஞ்சாயத்தின் தலைவர், நிர்வாக அதிகாரி, அல்லது பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் சேர்மன், அங்கத்தினர் அல்லது கமிஷனரையாவது அவர் களிடம் பணியாற்றும் உத்தியோகஸ்தர் அல்லது அவர்கள் சார்பாக ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கும் நபரையாவது, அவரவர்களுக்கு உரிய கடமையை, இந்தச் சட்டத்தின் படியோ அல்லது விதிகள், உத்தரவின்படியோ நிறைவேற்று வதிலிருந்தோ அல்லது வேலையைச் செய்வதிலிருந்தோ ாராகிலும் தடுத்தாலும்-தொந்தரவு செய்தாலும் அந்த க்கு ஐம்பது ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டு