பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 அங்கத்தினர், தலைவர், துணேத் தலைவர் தேர்தலானது இந்த விதிகளே அனுசரித்து (2) துணைவிதியில் வரையறுத்துள்ள தேர்தல் நீதிமன்றத்திற்கு, யாராவது ஒரு அபேட்சகர் அல்லது வாக்காளர் கிரமமாக தேர்ந்தெடுக்கப்ப்ட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள அபேட்சகருக்கு எதிராக அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அபேட்சகர் இருவர் அல்லது அதற்கு மேற்பட்டவர் இருந்தால், அத்தகைய அபேட்சகர்கள் அே வருக்கும் அல்லது அவ்ர்களில் யாருக்காகிலும் எதிரா கொடுக்கும் தேர்தல் மனு மூலமாகவன்றி மற்றபடி எங்கும் ஆட்சேபிக்கக்கூடாது. (2) தேர்தல் நீதிமன்றம் என்பது, (i) பகுதி (ii)ன்கீழ் வருகிற விஷயங்கள் நீங்கலாக, நீலகிரி தவிர்த்த இதர ஜில்லாக்கள் விஷயத்தில், சம்பந்தப் பட்ட பஞ்சாயத்து அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் அதிகார வரம்புள்ள ஜில்லா முன்சீபும், அந்த இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முன்சிபுகள் இருந்தால், ஜில்லா தலைமை முனிசிபும், நீலகிரி ஜில்லா விஷயமாக உதகமண்ட லத்திலும் ஸ்பார்டினேட் நீதிபதியும் ஆகும். (ii) பொதுவாக பஞ்சாயத்துகள் விஷயமாக அல்லது அதே ஜில்லாவில் அல்லது தாலூகாவில் உள்ள பஞ்சாயத்துகள் விஷயமாக அரசாங்கம் அவ்வாறு கட்டள்ே யிட்டால், இது விஷயமாய் அரசாங்கம், பெயர் குறிப்பிட்டோ அல்லது பதவி காரணமாகவோ நியமிக்கக்கூடிய அரசாங்க அலுவலர் ஆகும். ஆனால், விண்ணப்பித்துக் கொள்வதன்மேல் ஏதாவது ஒரு தேர்தல் மனு (a) பகுதி (i)ன்கீழ் ஜில்லா முன்சீபுக்குக் கொடுக் கப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட ஜில்லா நீதிபதி தமது அதிகார வரம்பிற்குள் மற்ருெரு ஜில்லா முன்சீபுக்கு அதை மாற்றலாம்; - (b) பகுதி (ii) ன்கீழ் ஒர் அரசாங்க அலுவலருக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டிருந்தால், அரசாங்கத்தின் வேருெரு அலுவலருக்கு அரசாங்கம் அதை மாற்றலாம்; அல்லாமல், மேற்கூறிய விலக்கு நிபந்தனேயின்கீழ் தேர்தல் மனு, யாராவது ஒர் அதிகாரிக்கு மாற்றப்பட்டிருந் தால் அந்த அதிகாரியே தேர்தல் நீதிமன்றமாகக் கருதப்பட வேண்டும். III—2