பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 ஆல்ை, பஞ்சாயத்தின் யாராவது ஒரு அதிகாரி அல்லது ஊழியர் அல்லது பஞ்சாயத்தில் பணிபுரிய விரும்பும் யாராவது ஒரு நபர் விஷயத்தில், பயன்படத்தக்க விதி அல்லது ஒழுங்குமுறை இருப்பின், அந்த விதி அல்லது ஒழுங்கு முறையில் வகை செய்துள்ள முறையைவிட, பாதகமான முறையில் மேற்சொன்னவர்களது விஷயம் கவனிக்கப்படக் கூடாது. > 26. நிறுவனங்களுக்கு விடுமுறை விடுதல் (ப. ச. 173 (1), 58. (1)}. விதிகள் அரசாங்க அலுவலகங்கள் விஷயமாகவும் நிறுவனங்கள் விஷயமாகவும் அவ்வப்போது அரசாங்கத்தினர் எந்த நாட்களில் பொது அல்லது விசேஷ விடுமுறை நாட்களே அனுமதிக்கின்றனரோ அந்த நாட்களில் மட்டுமே, பஞ்சா யத்துகளின்கீழ் உள்ள அலுவலகங்களுக்கும் நிறுவனங்க ளுக்கும் விடுமுறை நாட்கள் அனுமதிக்கப்படும். ஆல்ை, கலெக்டரின் முன் அனுமதி இல்லாமல், அரசாங்க அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் அனு மதிக்கப்படும் விடுமுறை நாட்கள் தவிர, இதர விடுமுறை நாட்களே எந்தப் பஞ்சாயத்தும் தனது, நிர்வாகத்திலுள்ள அலுவலகங்களுக்கும் நிறுவனங்களுக்கும் அனுமதிக்கக் கூடாது. 27. அலுவலர்கள், ஊழியர்களின் நடத்தை (ப. ச. 611. ിഴക്ക് 1. நன்கொடைகள், கிராஜுயிடி, பரிசுகள் (1) இந்த விதிகளில் வகை செய்துள்ளபடி, பஞ்சா யத்தின் ஓர் உத்தியோகஸ்தர் அல்லது ஊழியர் நிர்வாக அதிகாரியின் முன் அனுமதியின்றி தமக்கு உறவு அல்லாத யாராவது ஒரு நபரிடமிருந்து ஏதேனும் ஒரு நன்கொடை, கிராஜுயிடி, அல்லது புரிசு தருவதை அல்லது தர முன் வருவதை, தமது சார்பில் அல்லது இதர யாரேனும் ஒரு நபர்