பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 (a) ஊழியத்தின் கால அளவு முழுவதையும் கிராஜு யிடி பெறும் காரியத்திற்காகக் கடைநிலை ஊழியமாகவுே கருதலாம் ; அல்லது, . (b) உயர்நிலை ஊழியத்தின் கால அளவை உயர்நிலை ஊழியச் சம்பள விகிதத்திலும், கடைநிலை ஊழியத்தை கண்ட நிலை ஊழியச் சம்பள விகிதத்திலும் கணக்கிடலாம். பகுதி (a)யின் கீழ், ஊழியர் ஒருவருக்கு வழங்கத்தக்க கிராஜூயிடியை 7-வது விதியின் கீழ் அவருக்கு கிராஜூயிடி கொடுக்கத்தக்க காலத்தில் அல்லது எதிர்காலச் சேமிப்பு நிதியில் அனுமதிக்கப்படுவதற்கு அடுத்து முன், அவர் பெறும் சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிட வேண்டும். இந்த விதி உயர்நிலை ஊழியர், கடைநிலை ஊழியர் இரு வருக்கும் பயன்படும். பகுதி (b)யின் கீழ், ஒவ்வொரு சம்பள விகிதத்திலும் கொடுக்கத்தக்க கிராஜுயிடியை, ஊழியர் கடைநிலையி லிருந்து உயர்நிலக்கு, அல்லது உயர்நிலேயிலிருந்து கடை நில் ஊழியத்திற்கு மாற்றப்பட்ட காலத்தில் அவர் பெற்ற சம்பளத்தின் அடிப்படையிலும், 7-வது விதியின் கீழ் அவ ருக்கு கிராஜுயிடி கொடுக்கத்தக்க காலத்தில் அவர் பெற்ற சம்பளத்தின் அடிப்படையிலும் அல்லது எதிர்காலச் சேமிப்பு நிதியில் அவர் அனுமதிக்கப்படுவதற்கு முன், அவர் பெற்ற சம்பளத்தின் அடிப்படையிலும் கணக்கிட வேண்டும். ஊழியர் ஒருவர் தவறன நடத்தை காரணமாக உயர்நிலையிலிருந்து கடைநில ஊழியத்திற்கு தாழ்த்தப் பட்டால், கல்ெக்டரின் விசேஷ அனுமதியின் கீழ் அல்லாமல் மற்றபடி, அவருக்கு இந்த விதியின் கீழ் கிராஜுயிடி எதையும் வழங்கக்கூடாது. விளக்கம்:-கடைநிலை ஊழியத்திற்கான கிராஜுயிடி, யும் உயர்நிலை ஊழியத்திற்கான கிராஜுயிடியும் சேர்ந்து அவரது ஊழியத்தின் கால அளவு முழுவதையும் உயர்நில ஊழியமாகவே கருதினுல், அவர் பெறத்தக்க கிராஜூயிடி தொகையைவிட அதிகமாகக்கூடாது. . 15. ஊழியர் ஒருவர் ஊழியத்தின் போதே இறந்து விட்டால், அவரது குடும்பம் கஷ்டமான நிலேயில் உள்ளது என பஞ்சாயத்து சந்தேகமறத் தெரிந்துகொண்டால், மேற்படி கிராஜூயிடி, 7-வது விதியின் கீழ் செலுத்தத்தக்க