பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/693

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 தாகும். எனவே, ஒரு கிராமப் பஞ்சாயத்துக்குச் செலுத்தப் பட வேண்டிய மானியத்தை தீர்மானிக்கையில் நிலுவை களே வசூலிப்பது, நடைமுறை வரிகளே வசூலிப்பது ஆகிய வற்றில் வேறுபாடு காட்டக்கூடாது. நிலுவைகளிலிருந்தும், நடைமுறையில் வர வேண்டியதுகளிலிருந்தும் வசூலிக்கப் பட்ட தொகையை ஒட்டி, ஒவ்வொரு புஞ்சாயத்துக்கும் செலுத்தப்படத்தக்க மர்னியத்தைத் தீர்மானிக்க வேண்டும். வீட்டு வரித் தீர்வையானது, 1948-ம் ஆண்டு சென்னே பொது நூலகங்கள் சட்டத்தின்படி விதிக்கப்படும் நூலக செஸ் அல்லது 1920-ம் ஆண்டு சென்னே ஸ்தல ஸ்தாபனங்கள் குறித்த முன்னுள் சட்டத்தின் 1V-வது அட்டவணையின் 19-வது விதியின்படி நீர் வழங்கலுக்காக வும், விளக்கு வசதிக்காகவும் விதிக்கப்படும் கூடுதல் வீட்டு வரி அல்லது 1989-ம் ஆண்டு சென்னேப் பொதுச் சுகா தாரச் சட்டத்தின் 25-வது பிரிவின்கீழ் விதிக்கப்படும் தண்ணிர் வரி ஆகியவற்றுள் ஒன்ருகக் கருதப்படுகிறது. எனவே, இந்த இனங்கள் சம்பந்தமான வர வேண்டியவை, வசூல், நிலுவை ஆகியவையற்றிய விவரங்களேத் தெளிவாக் வும், பஞ்சாயத்துச் சட்டத்தின்கீழ் விதித்து வசூலிக்கப் படும் பிரதான வீட்டு வரியினின்று வேறுபடுத்தியும் வைத்து வரவேண்டும். அப்படி வைத்தால்தான், இந்தச் சட்டத் தின்படி செலுத்தப்பட வேண்டிய கிராம வீட்டுவரி இணே மானியத் தொகையைச் சரியாகவும் எளிதாகவும் கணக் கிட்டுச் செலுத்த முடியும். 8. மேற்படி தொகை ஆண்டுதோறும் ஒரே மொத்தத் தொகையாகச் செலுத்தப்பட வேண்டுமா அல்லது தவணைகளில் செலுத்தப்பட வேண்டுமா? 1958-ம் ஆண்டு சென்னேப் பஞ்சாயத்துச் சட்டத் தின் கீழும், 1950-ம் ஆண்டுச் சட்டத்தின்கீழும், விட்டு வரியானது ஒவ்வொரு ஆண்டுக்கும் விதித்து வாங்கப்பட வேண்டியதாகும். ஆண்டு என்பது, ஏப்ரல் முதல் மார்ச் வரை நிதி ஆண்டு என்பதாகும். ஒவ்வோர் ஆண்டும், செப்டம்பர் மாதம் 30-ம் தேதி, மார்ச் மாதம் 31-ம் தேதியோடு முடிவடையும் அரை ஆண்டுகளுக்காக வீட்டு வரி விதித்து வாங்கப்படும். வீட்டு வரி அரை ஆண்டுக்கு ஒரு முறை விதித்து வாங்கப்படுவதுபோலவே, கிராம வீட்டு வரியும் இரண்டு அரை ஆண்டுத் தவணைகளில் செலுத்தப் .வேண்டும் என அரசாங்கத்தார் முடிவு கட்டியுள்ளனர் سا لسأ ஓர் அரை ஆண்டில் வசூலித்த விவரங்கள் அடுத்த அரை