பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/711

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 அப்படிப்பட்ட கிராமப் பஞ்சாயத்துகளில்தான் இந்தப் பிரச்னையானது எழுகிறது. கிராமப் பஞ்சாயத்துகளில்கூட இந்த அலுவல்கள் 'லே 7, 8, 9-வது பாராக்களில் சொல்லப்பட்ட முறையில் இல்லாமல், சற்று மாறுபட்ட முறையில் இருக்கும். பல கிராமங்களில் கர்னம்களும், ம்ணியக்காரர்களும் இந்தக் கடமைகளேத் திறம்பட கவனித்துக் கொள்ளக்கூடிய நிலையில் இருப்பார்கள். மற்றும் பல கிராமங்களில் கிராம்ப் பஞ்சாயத்துச் செயலாளராகப் பணியாற்றக்கூடிய படித்த நிப்ர்கள் கிடைப்பதும் சாத் தியமே. பெரிய கிராமங்கள் சிலவற்றில், அப்படிக் கிடைக்கின்ற வர்களே பஞ்சாயத்துச் செயலாளராக சேர்த்துக்கொள்வது சுலபமும் பொருத்தமுழ்க-- முன்பே சொல்லப்பட்ட அலுவல் களைச் செய்கின்ற அதிகாரிக்கும் பஞ்சாயத்துத் தலைவருக்கும் இடையே இருக்க வேண்டிய தொடர்பைவிட, பஞ்சா யத்துத் தலைவருக்கும் கிராம, பஞ்சாயத்துச் செயலாளருக்கு மிடைய்ே உறவு மிக நல்ல முறையில் இருக்க வேண்டும். இந்தக் காரணங்களைக் கருதி கிராமப் பஞ்சாயத்து கேட்டுக் கொண்டால் மட்டுமே, கிராமப் பஞ்சாயத்துச் செயலாளர் வேலேப் பொறுப்பை கர்ணத்திடம் ஒப்படைக்கலாம் என்று உத்தேசிக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி கிராமப் பஞ்சா யத்து, இந்தக் கடமைகளைச் செய்வதற்கு எந்த முறையைக் கடைப் பிடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருது கிறதோ, அப்ப்டிச் செய்ப் அதற்குச் சுதந்தரம் (இப்பொழுது அப்படித்தான் இருக்கிறது) வேண்டும், ஆல்ை, அப்படிச் செய்யும்பொழுது, அதல்ை ஏற்படுகின்ற செலவு, அந்தப் பஞ்சாயத்தின் வருமான விகிதத்தை அனுசரித்து, அளவை மீறக்கூடாது. அத்துடன், அதிகாரபூர்வமாக விதிகளில் நிர்ணயித்துள்ள அளவுக்கு மேலும் போகக்கூடாது. அரசாங்கம் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்கிறது. 11. கிராமத் தலையாரியின் அலுவல்கள் பஞ்சாயத்து, அல்லது பஞ்சாயத்து யூனியன்களுக்காக மணியக்காரர் வரி வசூல் வேலையைக் கவனிக்கும்பொழுது, ஆவருக்கு உதவியாக இருந்து பணியாற்றுவதும் தலையாரி யின் கட்மையில் ஒரு பகுதிதான் என்று அறிவிக்கப்பட வேண்டும். கிராமத்தின் பொது இடங்களிலுள்ள எல்லா மரங்களேயும் சேர்த்து, கிராமத்திலுள்ள பஞ்சாயத்தின்