பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/757

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27t. வரும் நபர் விஷயத்தில் தங்களுக்கு நியாயம் என்று தோன்று. கிற வகையில் நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தாருக்கு உள்ள அதிகாரத்தை வரையறுப்பதாகவோ, மட்டுப்படுத்துவ், தாகவோ கருதப்படக்கூடாது. ஆல்ை, பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அதிகாரி அல்லது ஊழியர் அல்லது பஞ்சாயத்து யூனியன் மன்றத்தில் பணிபுரிய விரும்பும் நபர் விஷயத்தில் பயன்படத்தக்க விதி. அல்லது விதி முறை இருப்பின், அந்த விதி அல்லது ஒழுங்கு முறையில் வகை செய்துள்ள முறையைவிடப் பாதகமான, முறையில் மேற்சொன்னவர்களது விஷயம் கவனிக்கப்படக் கி.டTது. 20. அலுவலர்கள், ஊழியர்களின் நடத்தை (ப. ச. 58 (1) 61) விதிகள் 1, நன்கொடைகள், கிராஜூயிடி, பரிசுகள் (1) இந்த விதிகளில் வகை செய்துள்ளபடிக்கன்றி. மற்றபடி, பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் ஓர் அலுவ லர் அல்லது ஊழியர், கமிஷனரின் முன் அனுமதியின்றி, தமக்குச் சொந்தமல்லாத நபரிடமிருந்து ஏதேனும் ஒரு நன் கொடை, கிராஜூயிடி அல்லது பரிசு கிடைப்பதை அல்லது தர முன் வருவதை தமது சார்பில் அல்லது இதர வேறு ஒரு நபர் சார்பில் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ ஏற்றுக் கொள்ளக் கூடாது; தமது குடும்பத்தைச் சேர்ந்த யாரே னும் ஒரு அங்கத்தினரை மேற்சொன்ன நன்கொடை, அல்லது ப்ரிசைப் பெற அனுமதிக்கவும் கூடாது. (2) அரசாங்கத்தாரின் பொது அல்லது விசேஷ உத்த ரவின் ஏற்பாடுகளுக்கு உட்பட்டு, பஞ்சாயத்து யூனியன் மன் றத்தின் அலுவலர் அல்லது ஊழியர் ஒருவர் மலர்கள், பழங்கள் அல்லது அதைப் போன்ற மதிப்புக் குறைவான் பொருள்களே அன்பளிப்பாக ஏற்றுக் கொள்ளலாம். ஆனல், பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் அலுவலர்களும், ஊழியர், களும் இம்மாதிரி பரிசுகள் அளிப்பதைக் கூடிய வரையில் ஊக்குவிக்கக் கூடாது. (3) அரசாங்கத்தாரின் பொது அல்லது விசேஷ உத்த ரவின் பிரிவுகளுக்கு உட்பட்டு, பஞ்சாயத்து யூனியன் மன்