பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/772

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 வுக்காக அனுப்பும் ஒவ்வொரு விண்ணப்பமும் தகுந்த அதிகாரிகள் மூலம் அனுப்பப்பட வேண்டும். 20. கெளரவிப்பதற்காக நடக்கும் பொது நிகழ்ச்சிகள் (1) பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் எந்த அலுவலர் அல்லது ஊழியரும் ஏதேனும் ஒரு வாழ்த்துரையை அல்லது பிரிவு உபசார உரையைப் பெற்றுக்கொள்ளக் கூடாது ; அவரைக் கெளரவிப்பதற்காக நடந்த ஒரு பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சிக்குச் செல்லவும் கூடாது. எனினும், மேற்படி அலுவலர் அல்லது ஊழியர் அவருடைய தனிப்பட்ட நண்பர்களால் அல்லது அவர் அங்கத்தினராக உள்ள ஒரு சங்கத்தினரால் அவருக்குக் கொடுக்கப்படும் ஒரு வழியனுப்பு விழாவுக்குச் செல்வதில் ஆட்சேபனே எதுவும் இல்லே. ஆல்ை, அழைப்பைப் பெற்றுக் கொள்ளும் பொழுது, மேற்படி அலுவலர் அல்லது ஊழியர் அந்த நிகழ்ச்சி முற்றிலும் தனிப்பட்டது, எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரு பொதுக் கூட்டத்தின் தன்மை வாய்ந்ததல்ல என்பதைப் பற்றியும், அவருக்கு எந்த விதமான உரையும் படித்து அளிக்கப்பட மாட்டாது என்பதைப் பற்றியும், நிகழ்ச்சி நிரல் பற்றிய அறிக்கை பத்திரிகைகளில் வெளியிடப்பட மாட்டாது என்பதைப்பற்றியும் தெளிவாகத் தெரிந்துகொள்ள வேண்டும். (2) எந்த வகையைச் சேர்ந்த அலுவலர் அல்லது ஊழியரும் அவரின் கீழ் வேலை செய்யும் ஊழியர்கள் நடத்தும் எவ்விதமான உபசாரத்தையும் ஏற்கக்கூடாது. 21. பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலர் அல்லது ஊழியராக இல்லாத ஒரு நபர், உறுப்பினராக, நிர்வாகியாக அல்லது ஆதரவாளராக இருக்கும் எந்த ஒரு பஞ்சாயத்து யூனியன் மன்ற அலுவலர்-ஊழியர் சங்கம், யூனியன் அல் லது சமஷ்டியிலும், பஞ்சாயத்து யூனியன் மன்றம் ஒன்றின் எந்த அலுவலரும் அல்லது ஊழியரும் உறுப்பினராக இருக்கக் 5a-l-sfjäl. 22. கொள்கை அல்லது நடவடிக்கையை விவாதித்தல் பஞ்சாயத்து யூனியன் மன்றத்தின் எந்த அலுவலர் அல்லது ஊழியரும் ஒரு பொது இடத்தில் அல்லது ஏதாவது ஒரு சங்கத்தில் அல்லது சபையில் ஏதேனும் ஒரு வார்த்தை யைக் கூறுவதோ எழுதுவதோ அல்லது மற்றபடி மத்திய,