பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/885

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 பிரிவின்கீழ், கிராமங்களே இனத்து ஒரே கிராமமாக அறிவிக்க இன்ஸ்பெக்டருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. ஆனல், வரம்பில்லாமல் இப்படிச் செய்துவிட முடியாது. உதாரணமாக, 25 கிராமங்களே ஒன்ருக்கி ஒரு பிரிவாக அறிவிக்க முடியாது. ஏனெனில், சட்டத்தின் நோக்கம் கிராமவாசிகளின் பிரதிநிதித்துவம் கொண்ட ஸ்தாபனங் களாலேயே நிர்வாகம் நடைபெற வேண்டும் என்பதும் ஒவ்வொரு கிராமமும் சாதாரணமாக ஒரு பிரிவாகக் கருதப் பட வேண்டும் என்பதும்தான். இவ்வழக்கில், சம்பந்த மில்லாத காரணங்களுக்காக இன்ஸ்பெக்டர் கிராமங்களே இணேத்திருக்கிருர் என்று சொல்லப்படவில்லே. முதலில் 8 அங்கத்தினர்கள் கொண்டிருந்த பஞ்சாயத்து 5 அங்கத் தினர்கள் கொண்டதாக்கப்பட்டதும், 5 பேரைக் கொண்ட சிறிய அமைப்பால் திறமையாகப் பணியாற்ற முடியாது என்று கருதி, இன்ஸ்பெக்டர் அதை இணேத்து 18 அங்கத் தினர்களேக் கொண்ட பஞ்சாயத்தாக்கி இருக்கிருச். எனவே, அறிவிப்பானது நல்லெண்ணம் கொண்டது என்று மட்டும் தான் சொல்ல முடியும். 3. (c) (2) (ii) பிரிவின்படி, முன்னர் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யும் அதிகாரம் (1) உட் பிரிவில் காணப்படும் விஷயங்கள் நீங்கலானவற்றுக்கே பொருந்தும் என வாதிக்கப்பட்டது. 3 (c) (2) (ii) பிரிவில் காணப்படுபவை 3. (1) (a) நீங்கலானவற்றுக்கு மட்டுமே சம்பந்தம் உள்ளவை என்று பொருள் கொள்ள முடியாது, சட்டத்தின் கொள்கை 500க்கு மேற்பட்ட ஜனத்தொகை கொண்ட கிராமத்துக்கு பஞ்சாயத்து சபை அமைப்பதாகும் என்று வாதாடப்பட்டது. ஆல்ை, பொருத்தமானதாகுல், ஒரே ரெவின்யூ கிராமத்தை மற்ருேர் கிராமத்தோடு சேர்க்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது அப்பீல் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. [W. A. 210/62. L. W. 78. 228.]