பக்கம்:பஞ்சாயத்து நிர்வாக முறை.pdf/904

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 வரோ அங்கு வரவில்லை என்றும் தற்காலிக தலைவர் மற்ற மூன்று அங்கத்தினர்களேச் சேர்த்துக் கொண்டு மோசடி யாக தம்முடைய மனைவியை கூட்டு அங்கத்தினராகச் சேர்க்கும் தீர்மானத்தை பதிவு செய்திருப்பதாகவும் வாதிக் கிருர். பிரதானமான பிரச்சினய்ானது, R.D.0.வுக்கு இது போன்ற சந்தர்ப்பங்களில் தலைவருடைய அலுவல்களே கவனிக்குமாறு கிருஷ்ணசாமியை நியமிக்க அதிகாரம் இல்லே என்றும், இரண்டு கூட்டங்களுக்கான கூட்ட அறிவிப்பு, விதிகளே ஒட்டிய்து அல்ல வென்றும் இரண்டா வது கூட்டம் நடைபெறவே இல்லை என்றும் ஆகேஷபிக்கப் படுகிறது. தீர்ப்பின் சாரம் "பஞ்சாயத்துச் சட்டம் 2. (17) பிரிவின்படி பஞ்சாயத்து அங்கத்தினர் என்பது கூட்டு அங்கத்தினரையும் குறிக்கும். எனவே, தலேவர் தேர்தலானது, கூட்டு அங்கத்தினரைச் சேர்த்துக் கொண்ட பின்னரே நடைபெற முடியும். பஞ்சா யத்துக்கு கூட்டு அங்கத்தினரைச் சேர்த்துக் கொள்ளப்பட்ட பின்னரே பஞ்சாயத்து பூர்த்தியாகும். பஞ்சாயத்துச் சட்டம் 34-வது பிரிவின்கீழ் பூர்த்தி செய்தல்’ என்ற சொல், தற் காலிக காலிஸ்தானங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று கொள்ள முடியாது. தவிர, சட்டம் முழுவதிலும் பூர்த்தி செய்தல்’ என்ற சொல், தற்காலிக காலிஸ்தானங்களுக்கும், சாதாரண காலி ஸ்தானங்களுக்கும் பொதுவாகவே பயன் படுத்தப்பட்டு வந்திருக்கிறது. 34. (3) பிரிவு, மாற்றி அமைப்பது உள்ளிட்ட எல்லா சந்தர்ப்பங்களுக்கும் பொருந்து மாறு அமைந்துள்ளது. ஆகவே, கிருஷ்ணசாமியின் தற் காலிக நியமனம் அனுமதிக்கத் தக்கதே. ஆயினும், அவர் தம்முடைய மனைவியை கூட்டு அங்கத்தினராகச் சேர்த்துக் கொண்ட செய்கையானது முறையானதா இல்லேயா என்பது R. D. O. விசாரணையில் இருப்பதால், அதைப் பற்றிய அபிப் ராயம் எதுவும் இங்கே கூறப்படவில்லே. - குறிப்பு: 1965, மார்ச், 4-ம் தேதிக்குப்பின், தற்காலிக தலைவருக்கு, கூட்டு அங்கத்தினரைச் சேர்த்துக் கொள்வ தற்கான கூட்டத்தைக் கூட்டும் அதிகாரம் இல்லே என்றும் தெளிவாக்கப்படுகிறது. இந்த வழக்கிலும் இந்த விஷயம் பிரஸ்தாபிக்கப்படுகிறது. [W. P. 942s65. L. W. 79. 3..]