168 □
சங்கர் கமலாவை ஒன்பதரைமணி வரையிலும் தவிக்கவிடவில்லை; அதற்குள் வந்து சேர்ந்து விட்டான். செருப்பின் ஓசையைக் கேட்டதும் 'அண்ணன் தான்' என்று தெரிந்து கொண்டவளாய் கமலா வெளியே ஓடி வந்தாள்.
வந்ததும் வராது துமாய் "அண்ணா , அத்தானுக்கு எப்படியிருக்கு?" என்று ஆவலோடு கேட்டாள்.
"ஒன்னும் பயமில்லை, கமலா. காய்ச்சல் இறங்கி விட்டது" என்று விஷயத்தைச் சொன்னான் சங்கர்.
சங்கர் சொல்வதைக் கேட்டுக்கொண்டே வெளிவந்த தர்மாம்பாள், "வாடாப்பா! அண்ணனைக் காணாமல் சாப்பிடவே மாட்டேன்னு ஒரே சாதனையாய் சாதிச்சித் தீர்த்துட்டா, உன் தங்கச்சி இப்பவாவது நல்ல வார்த்தை கொண்டாந்தியே!" என்று நிம்மதி நிறைந்த பெருமூச்சுடன் சொன்னாள் தர்மாம்பாள்.
கமலாவின் முகத்தில் ஒரு அசட்டுப் புன்னகை மலர்ந்து கூம்பியது.
"அசடு, இவ்வளவு நேரமும் சாப்பிடாமலா இருந்தே? மணிக்கு ஒரு ஆபத்துமில்லைன்னு அன்னிக்கி டாக்டர் நடராஜனே உங்கிட்ட சொல்லலியா?" என்று செல்லமாகக் கடிந்து கொண்டான் சங்கர்.
"சரி, சரிவாங்கரெண்டுபேரும், சாப்பிடலாம்" என்று கூறியவாறே உள்ளே திரும்பினாள் தர்மாம்பாள்.
'போம்மா, வர்ரேன் " என்று சொல்லிவிட்டு, கைகால் கழுவுவதற்காகக் குழாயடிக்குச் சென்றான் சங்கர்; கமலா அவனைத் தொடர்ந்து குழாயடிக்குத் தானும் சென்று விட்டாள்.
"அண்ணா, அத்தானை நாளைக்காவது பார்க்கலாமா?"என்று கொஞ்சும்குரலில் கேட்டாள் கமலா.
"இன்னம் ரெண்டு நாளைக்கு டாக்டர் யாரையுமே