186 □
"அதற்கென்ன?கூட்டி வருகிறேன்" என்று கூறிவிட்டுத் திரும்பினான் சங்கர்.
அவர்கள் அனைவரும் வெளியேறினர். டாக்டர் விடைபெற்றுக் கொண்டு தமது அறைக்குச் சென்றார். இருளப்பக் கோனார் வாசல்வரையிலும் வந்து சங்கரையும் கமலாவையும் வழியனுப்பிவிட்டு, "போயிட்டு வாங்க தம்பி" என்று அருமையோடு கூறியவராய் உள்ளே திரும்பினார்.
சங்கர் ஏதோ ஞாபகம் வந்தவனாகக் கோனாரைக் கூப்பிட்டான்.
கோனார் திரும்பிவந்தார்.
சங்கர் தன் சட்டைப் பையிலிருந்து ஐம்பது ரூபாய் நோட்டுக்களை எடுத்து இருளப்பக் கோனாரிடம் கொடுத்து, "இதை வைத்துக் கொள்ளுங்கள் டாக்டரிடம் கேட்டு, மணிக்கு ஏதாவது வாங்கிக் கொடுங்கள். மற்றச் செலவுக்கும் இருக்கட்டும்" என்று கூறியவாறே தன் காரில் ஏறி உட்கார்ந்தான்.
கார் புறப்படப் போகும் போது, கமலா இத்தனை நேரமும் தன்னுள் அடக்கி வைத்திருந்த கேள்வியைச் சங்கரிடம் கேட்டுவிட்டாள்."என்னண்ணா ,டாக்டரிடம் நீ இதையெல்லாமா சொல்லி வைக்கிறது?"
"எதை" என்று தெரியாததுபோல் கேட்டான் சங்கர், எனினும் அவன் முகத்தில் அரும்பிய குறுஞ்சிரிப்பு அவனைக் காட்டிக் கொடுத்துவிட்டது.
"போ அண்ணா !" என்று செல்லமாகச் சிணுங்கிக் கொண்டாள் கமலா.
கார் புறப்பட்டுச்சென்றது.
இருளப்பக்கோனார், அவர்கள் எதைப்பற்றிப் பேசிக் கொண்டார்கள் என்றுபுரியாதவராய் அவர்கள் இருவரின் அன்பையும் சௌஜன்யத்தையும் வியந்து போற்றி,