பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

233


"தெய்வக் கேக்குதோ, இல்லியோ?நாமதான் முதல்லெ கேக்கணும். நான் போயிருந்தேனே, அந்த விவசாயிகள் மகாநாட்டிலே." என்று குறுக்கிட்டு ஏதோ சொல்ல முனைந்தார் வடிவேலு முதலியார்.

அதற்குள் "என்ன அண்ணாச்சி, என்ன நடக்குது?" என்று சௌஜன்யத்தோடு கேட்டுக்கொண்டே அங்குவந்து சேர்ந்தான் சங்கர்.

சங்கர் வந்தவுடன் மண்டபத் திண்ணையிலிருந்த நெசவாளிகள் அவனுக்கு இடம் விட்டு ஒதுங்கி உட்கார்ந்தனர்; சங்கரும் அவர்களோடு சென்று அமர்ந்து கொண்டான்.

"வாப்பா சங்கரா. உன்னைத்தான் தேடிக்கிட்டிருந்தேன். நல்ல சமயத்திலே வந்தே. நேத்து நம்ம பஞ்சாயத்து யூனியன் மைதானத்திலே பொதுக் கூட்டம் நடந்ததே. நீ போனியா?" என்று ஆவலோடு கேட்டார் வடிவேலு முதலியார்,

"நேத்து நான் ஊரிலேயே இல்லையே?" என்றார் சங்கர்.

"கேளு தம்பி. பெரிய தலைவர்னாங்க, பேச்சு என்னமோ சின்னத்தனமாகத்தான் இருந்தது. நடு ரோட்டிலே சண்டை போடுகிறவன் கூட, கொஞ்சம் நாசூக்காகப் போவான் இவரானா." என்று சொல்லில் பாவம் தொனிக்கத் தம் பேச்சுக்கு மேளம் கட்டினார் வடிவேலு முதலியார்.

"சரி‌ என்ன சொன்னார்?"என்றான் சங்கர்

"என்ன எழவெல்லாமோ சொன்னார். நெசவாளிகள் கஷ்டத்தைப் போக்குறதுக்கு சர்க்கார் ஆன மட்டும் உதவி செஞ்சிக்கிட்டுத்தான் வருதாம். இன்னம் கொஞ்ச நாள் பெறுத்திருந்தா நிலைமை சீர்ப்பட்டுப் போகுமாம். நம்ம ஊரிலே நெசவாளிகள்ளாம் சின்னப் புள்ளைக பேச்சைக்