பக்கம்:பஞ்சும் பசியும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79




குடிசையின் வெளிச் சவரிலிருந்த மாடக் குழிக்குள் ஒரு சிறிய தகரக்குப்பி மண்ணெண்ணெய் விளக்கு மினுக் மினுக்கென்று எரிந்து புகை கக்கிக் கொண்டிருந்தது; பொருமிப் பொருமி வீசும் மேல்காற்று தன் ஜீவனைப் பறித்துக் கொண்டு சென்று விடாதவாறு, அந்த விளக்கின் வற்றி மெலிந்த தீச்சுடர் கூனிக் குறுகி வளைந்து கொடுத்து உயிரைக் காப்பாற்றிக் கொண்டிருந்தது. பனையோலை வேய்ந்த அந்தக் கூரைக் குடிசையின் உச்சியில் வழிதவறி வந்த ஒருகாட்டுக்கூகைசிறிதுநேரம் அமர்ந்து, பயங்கரமாக அபயக் குரலெழுப்பிக் குழறிவிட்டு, படபடத்துப் பறந்து சென்று இருளில் மறைந்தது. குடிசைக்கு வெளிப்புறத்தில் கட்டியிருந்த கொடியில் அழுக்கும் கந்தலுமான சில துணிகளும், ஒரு சாட்டைக் கம்பும் தொங்கிக் கொண் டிருந்தன. குடிசையின் மூலையில் ஒரு பெரிய கழுநீர்ப் பானையும் ஆட்டுரலும், உடைந்தும் உபயோகமற்றும் போன பண்ட பாத்திரங்களும் கிடந்தன. மாட்டுச் சாணத்தின் நாற்றமும், கொசுக்களின் இரைச்சலும், அந்த இடமெங்கும் வியாபித்து நின்றன.

முழங்காலில் சுரீர் என்று கடித்தகொசுவைக் கையால் அறைந்து கொண்டே, இருளப்பக் கோனார் குடிசையை ஒட்டியிருந்த மாட்டுத் தொழுவத்தை எட்டிப் பார்த்தார். தொழுவத்தில் இருளப்பக்கோனாரின் மனைவிமாரியம்மா வைக்கோல்படைப்பிலிருந்துவைக்கோல் பிடுங்கி, மாட்டுக் கொட்டிலில் போட்டுக் கொண்டிருந்தாள். தொழுவத்தில் கட்டியிருந்த மாடுகள் கடுக் கடுக்சென்று வைக்கோலைக் கடித்து அசைபோடும் மெல்லிய சப்தம்கூட, அந்த அமைதி நிறைந்த இருள் வேளையில் தெளிவாகக்கேட்டது.

வைக்கோலை அள்ளிப் போட்டுவிட்டு, முற்றத்திலிருந்த தண்ணீர்த் தொட்டியில் முகங்கால் கழுவிவிட்டு, வந்துசேர்ந்தாள்மாரி.

மாரியம்மாவுக்கு வயது நாற்பத்தைந்து இருக்கலாம். எனினும் அவள் வயதுக்கு மீறிய வயோதிகத் தன்மையோடு