பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

பஞ்ச தந்திரக் கதைகள்

அன்பாகக் கீரிப்பிள்ளையை வளர்த்து வரும்போது அவன் மனைவி வயிற்றில் கருப்பம் உண்டாகியது.

பஞ்சாங்கம் சொல்பவனாகிய அந்தப் பார்ப் பனன் தன் மனைவியைப் பார்த்து,' அன்பே, உனக்கு ஓர் ஆண் பிள்ளை பிறப்பான். அவன் நான்கு வேதங்களுக்கும் தலைவனாக விளங்குவான். பெரும் செல்வமும் செல்வாக்கும் பெற்றுத் திகழ்வான். உன்னையும் என்னையும் நம் குலத்தையுமே ஆதரித்துக் காப்பாற்றுவான். அரசர் மெச்சிப் புகழும்படி புரோகிதம் சொல்லிக் கொண்டு நூறு வயது வரை இருப்பான்’ என்று பிறக்கப் போகும் தன் மகனைப் பற்றி ஆரூடம் கணித்துச் சொன்னான்.

பகற் கனவு கண்ட பிரமசாரியைம் போல் நீங்கள் மனக் கோட்டை கட்டாதீர்கள். எல்லாம் நடக்கும் காலத்தில் பார்த்துக் கொள்ளலாம்" என்று அவன் மனைவி செல்லமாக மறுத்துச் சொன்னாள்'

அவன் மனைவிக்குக் கர்ப்பம் முற்றிக் கடைசியில் ஒரு நாள் நல்ல வேளையில் ஓர் அழகான ஆண் பிள்ளை பிறந்தது. அந்தப் பிள்ளை பிறந்த பின் ஒரு நாள் தீட்டு கழிப்பதற்காக அவள் சுனைக்கு நீராடச் சென்றாள், பார்பனன் பிள்ளையைப் பார்த்துக் கொண்டு வீட்டில் இருந்தான்.

அப்போது அரச தூதர்கள் வந்து அரண்மனையில் சிரார்த்தம். அதற்கு வாருங்கள்’ என்று அழைத்தார்கள். அந்தச் சமயத்தில் தான போகாவிட்டால்