பக்கம்:பஞ்ச தந்திரக் கதைகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தலையில் சுழன்ற சக்கரம்

213

மற்ற இருவரும் போகும் வழியில் ஒருவனுடைய திரிச்சீலை கீழே விழுத்தது. அந்த இடத்தில் நிறையத் தங்கம் கிடைத்தது. இதை நீயே வைத்துக்கொள் என்று சொல்லிவிட்டு நான்காமவன் மேலும் நடந்தான். தங்கத்திற்கு உரியவன் அவனைப் பார்த்து, நீ திரும்பிவரும் வரை நான் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் வந்துவிடு என்று சொன்னான். அவன் சரி என்று சொல்லி விட்டுப் போனான்.

அவன் போகும் வழியில் ஒரு மனிதனைக் கண்டான். அந்த மனிதனுடைய தலையில் சாயாமல் ஒரு சக்கரம் சுழன்று கொண்டிருப்பதைக் கண்டான். அவனைப் பார்த்து "நீ யார்? உன் தலையில் ஏன் சக்கரம் சுழல்கிறது?" என்று கேட்டான். அவன் கேட்டு முடித்தவுடனே அந்தச் சக்கரம் கேட்டவன் தலையிலேயே வந்து இருந்து கொண்டு சுழலத் தொடங்கிவிட்டது.

"என்ன இது? கிணறு வெட்டப் பூதம் புறப்பட் டது போல் இருக்கிறதே?" என்று அவன் பயந்து, அந்த மனிதனைப் பார்த்துக் கேட்டான். அதற்கு அந்த மனிதன் முன்பு குபேரனால் எனக்கு ஒரு சாபம் ஏற்பட்டது. அதனால் இந்தக் கூர்மையான சக்கரம் என் தலையில் சுழன்று கொண்டிருந்தது. உன்னைக் கண்டால் என் சாபம் தீருமென்று சொல்லியிருந்தான். அதன்படி இன்று நடந்தது" என்றான்,