இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
52
பஞ்ச தந்திரக் கதைகள்
உடனே நரி, 'என்னைத் தின்னுங்கள்’ என்றது.
‘உன்னைத் தின்றாலும் என் பசியடங்காதே' என்று சிங்கம் கூறியது.
புலி முன் வந்து,' அரசே என்னைச் சாப்பிடுங்கள்!' என்று வேண்டியது,
'நீயும் என் பசிக்குப் போதுமானவன் அல்ல’ என்று மீண்டும் சிங்கம் மறுத்துக் கூறியது.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒட்டகம்' நம்மைக் கொல்லத்தான் சூழ்ச்சி நடக்கிறது’ என்று தெரிந்து கொண்டது. ஆயினும் வேறு வழியில்லாமல், 'அரசே, நான் மிகுந்த தசை உடையவன், என்னைக் கொன்று தின்னுங்கள்? என்று கூறியது.