பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

59


இது அன்றாடம் நடைபெறுகிற சாதாரண விஷயமாகத் தோன்றலாம். ஆனால் என்றாவது ஒரு நாள்; அல்லது எப்போதாவது ஒரு தடவை சற்று அஜாக்கிரதையாய்ச் செயல்பட்டால்; அடுப்பிலோ; விளக்கிலோ உள்ள சிறு தீ வீட்டுக் கூரைக் குத்தாவி; தெருவையே அழிக்கும் பெரு நெருப்பாகிவிடும். வந்தபின் தடுப்பதைவிட, வருமுன் காப்பது அல்லவா புத்திசாலித்தனம்.

விபத்துக்களைப் பார்த்து யாரும் நெருப்பை வெறுக்க முடியாது. ஏனெனில் விபத்திற்குப் பொறுப்பு நெருப்பு அல்ல; அதை கவனக் குறைவாகக் கையாண்டவரே.

அலட்சியமும், அஜாக்கிரதையுமின்றிக் கவனமாக அடக்கி ஆண்டால்; நெருப்பு ஒரு இன்றியமையாத நல்ல நண்பனே. நெருப்பில்லாமல் மனித. வாழ்க்கை முற்றுப் பெறாது.

நெருப்பு ஒரு அரிய சொத்து. இதைத் தேடி அடைய ஆதிமனிதன் படாத பாடுபட்டான். அக்கினியைத் தெய்வமாக முனிவர்கள் வழிபட்டனர். உலக க்ஷேமத்திற்காக முன்னாளில் காட்டில் வாழும் ரிஷிகள் யாககுண்டம் ஏற்படுத்தி; அதில் அக்கினியை மூட்டி மந்திரம் ஓதி, நெய், தயிர். பால் போன்றவற்றை ஹோம குண்டத்தில் வார்த்து இறைவனை வணங்கினார்கள்.