பக்கம்:பஞ்ச பூதங்களின் அறிவியல் கதைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72


◯ கட்டிடத்திற்குள் உள்ள பிராண வாயுவின் அளவு 6 சதவிகிதத்திற்குக் குறைந்து விட்டால், உள்ளே இருப்பவர் 6 முதல் 7 நிமிடங்களுக்குள்ளாக உயிரிழக்க நேரிடும்.

எனவே-

பாதுகாப்பு உடைகள் இல்லாமலோ, மூச்சுக் கருவிகளை உபயோகிக்காமலோ எரிவும் குடிசைக்குள்ளோ, கட்டிடத்திற்குள்ளோ நுழையக் கூடாது.

திடீரென்று ஒருவர் ஆடை மீது தீ பற்றிக் கொள்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்; அவர் உடனே பயந்து அங்குமிங்கும் ஓடக்கூடாது. அப்படி ஓடினால் காற்றிலுள்ள பிராண வாயுவினால் தீ இன்னும் அதிகமாகப் பரவும். ஆகையினால் அவர் உடனே தரையில் படுத்து உருள வேண்டும்.

அதனால் நெருப்புக்கும் தரைக்கும் உள்ள இடைவெளியில் பிராணவாயு கிடைப்பது தடைபடும். பிராணவாயு தொடர்ந்து கிடைக்கா விட்டால் நெருப்பு அணைந்துவிடும். அதோடு தீப் பற்றிய நபரின்மீது தண்ணீரை ஊற்றுவதைத் தவிர்க்கவேண்டும்.

உடனடியாக கம்பளித்துணி, ஈரமான சாக்கு இவற்றால் அந்த நபரை சுற்றினால் தீ அணைந்து விடும்,