இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கவிஞர் சுரதா
கிழவயது, குரங்கழகு, உடையோர் கூட, கிளிச்சிறைப்பொன் ஆபரணம் அணியுங் காலம். பழக்கூடை பருவமலர்! போன்ற உங்கள் பத்தினிக்கோ, முக்குத்தி கூட இல்லை. தழைத்துள்ள புன்னேமலர் அரும்பை யேனும் தந்திடுங்கள் முக்குத்தி என்று! விண்மீன்; விழுந்தாலும் அதனை ஒரு மாலை யாக்கி விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வேன்-என்ருள்.
காலுக்கு மேலேஓர் விரியன் பாம்பு, கடித்தபடி இருக்கின்ற காட்சி போல; சேலேமலைத் தேன்பூவே! உனது காலில் சிலம்பிருந்தால், நடக்கும் போது பாடும். மாலையிட்ட உன்கழுத்தில், அழகு முத்து மாலையிட்டால், அம்மாலே நீயும் நானும், லே இருள் உண்டாக்கி இன்பங் கானும் நேரத்தில் உறுத்திடினும், வலித்தி டாது?
ᎽᏰᏑᎴ