பக்கம்:பட்டத்தரசி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோற்ருன்-வென் ருள்

காதலுக்குப் பஞ்சமில்லே நாட்டில்; ஆனல் கல்விக்குத் தான்பஞ்சம்; இல்லா விட்டால், பேதையர்போல் இருப்பாரோ? விடையைக் கூறிப் பெற்றிருக்க மாட்டாரோ பரிசு விண்ணில் மாதத்திற் கோர்தடவை மரண மாகும் வட்டங்லா இரண்டுமுறை இருண்டும், நாட்டில் மேதையெனப் பேர்பெற்ற நீங்கள் கூட விழிக்கின்றீர், விடைகூற முடிய வில்லை !

ஊரறிந்த பேரறிஞர்; புலவர்; விேர் உயிரெழுத்தைச் சமயத்தில் மறந்து போவீர்! பேரறிவு பெற்றிருக்கும் உம்மைப் போன்ற பெரியோர்க்கு மறதிமிக அதிகம் அன்ருே? நீரினிலே முகம்பார்க்கும் அழுக்கு வெள்ளே நிலவுதனை யாம்பிடிப்போம், என்னும் நீங்கள்; கூரைதனில் உட்கார்ந்து இருக்கும் சிட்டுக் குருவிதனைப் பிடிப்பதற்கு முடிய வில்லை.

ού

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பட்டத்தரசி.pdf/38&oldid=662127" இலிருந்து மீள்விக்கப்பட்டது